13 January 2010

சல்லடை


எத்தனை முறைதான்... எத்தனை பேரைத்தான்....

காதலிப்பாய்...

இன்று ஈட்டிகள் பாய்ந்து பாய்ந்து
ozone னைவிட ஓட்டைகள் அதிகம் ..

உன் இதயத்தில்தான் !!!!

பாவ மன்னிப்பு


எப்போதாவது பூத்து சிரிக்கும் என் வீட்டு ரோஜா

எப்போதும் அழுது வடியும் என் கண்ணாடி பிம்பம்

எப்போதாவது கேட்கப்படும் இனிய வார்த்தைகள்

எப்போதும் கேட்கும் எதிர்வீட்டு குழந்தையின் அழுகுரல்

இவற்றில் எல்லாம் வெளிபடுவது........கருவிலேயே மடிந்த...

இல்லை.... கொல்லப்பட்ட குழந்தையின் மரண ஓலம்...

மானசீகமாய் பலமுறை கேட்டும்...

இல்லாத குழந்தை இடமிருந்து...

எங்கிருந்து வரும் மன்னிப்பு!!???


05 January 2010

சிறகுகள்


பறப்பதற்கு சிறகுகள் தந்தாய் நீ
நான் மீனினம் என்பது தெரியாமல்....

காகித பூ


மலராய் இருந்தேன் மனம் வீசிக்கொண்டு, உன்
மனதை என்னிடமிருந்து பிரிக்கும் வரையில்... இன்று,
காகித பூவாய் காற்றில் மிதக்கிறேன், உன்
காதல் கடிவாளம் தருவாயா?
மௌனமாய் இருந்தாய்!!
சம்மதம் என்று நினைதேன்.
உன்னை மறந்துவிடசொன்னாய்!!
நானும் மறந்துவிட்டேன்!!
உன்னையல்ல!!
நீ சொன்னதை!!