கண்ணை இழந்ததால்
மில்டன் எழுதினான் "PARADISE LOST"...
உன்னிடம் என்னை இழந்ததால்தான் ,
எனக்கு என் "PARADISE REGAINED"!!!!
கண்ணை இழந்ததால்
மில்டன் எழுதினான் "PARADISE LOST"...
உன்னிடம் என்னை இழந்ததால்தான் ,
எனக்கு என் "PARADISE REGAINED"!!!!
சருகுகளுக்கு மட்டுமே சொந்தமான எனது தோட்டத்தில் முதன் முதலில் ஒரு துளிர்
நீர் பாய்ச்சி உரமிட்டது என் தவறா? நிஜமென நினைத்தது என் தவறா?
செடியாகி மரமாகி பூத்து குலுங்குகையில், பூப்பறிக்க நீ வருவாயென உச்சி கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடுது மனசு
பூவை காயாக்கி கனியாக்க வருவாயென நினைதேன்... கிளையோடித்து சென்றது ஏன்?
அருந்த ஊஞ்சலில் சிதறிய என் இதயத்தின் சில்லுகள் சிலவற்றை காணவில்லை ....
வேண்டாத மரத்தை வேரோடு பிடுங்கவும் முடியாமல் விட்டு வைக்கவும் முடியாமல் வெட்டி மட்டும் வைத்தேன் ... மீண்டும் துளிர்க்குமென்று தெரியாமல் ...
மறுபடியும் செடி, மரம், பூ, காய், கனி, வேட்டல், வளர்தல் ... சுழற்கிறது என் வாழ்வு இப்படி...
எத்தனை முறை சொன்னாலும், ஏமாற்றம் அடைந்தாலும் ...
எகத்தாளம் பிடித்த இதயத்திற்கு தெரிவதில்லை... உன் மௌன வார்த்தைகளால் மடிவது மரம் மட்டுமல்ல என் மனமும்தானென்று !!!!
எப்போதாவது பூத்து சிரிக்கும் என் வீட்டு ரோஜா
எப்போதும் அழுது வடியும் என் கண்ணாடி பிம்பம்
எப்போதாவது கேட்கப்படும் இனிய வார்த்தைகள்
எப்போதும் கேட்கும் எதிர்வீட்டு குழந்தையின் அழுகுரல்
இவற்றில் எல்லாம் வெளிபடுவது........கருவிலேயே மடிந்த...
இல்லை.... கொல்லப்பட்ட குழந்தையின் மரண ஓலம்...
மானசீகமாய் பலமுறை கேட்டும்...
இல்லாத குழந்தை இடமிருந்து...
எங்கிருந்து வரும் மன்னிப்பு!!???